ஆவினில் செறிவூட்டப்பட்ட பர்ப்பிள் நிற பசும்பால் அறிமுகம்

சென்னை: ஆவினில் செறிவூட்டப்பட்ட பர்ப்பிள் நிற பசும் பால் பாக்கெட் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் 27 மாவட்ட ஒன்றியங்களில் இருந்து, ஆவினுக்கு தினமும் 30 லட்சம் லிட்டர் பால் வருகிறது. கடந்தாண்டு விற்பனையைவிட 3 லட்சம் லிட்டர் அதிகம். வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் கண்பார்வையை மேம்படுத்துவதிலும் மற்றும் எலும்புகளை உறுதிப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பாலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெற்றுத் தருவதில் வைட்டமின் டி பங்களிப்பதினால், பாலில் வைட்டமின் டி செறிவூட்டம் செய்வது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அதன் அடிப்படையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பால் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பால் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித்துறை மானியத்தின்போது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களின் நலன் கருதியும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி செறிவூட்டம் செய்யப்பட்ட பர்ப்பிள் பசும் பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் பாலில் செறிவூட்டுதலுக்காக அனுமதிக்கப்பட்ட அளவில் பால் வகைகளில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டம் செய்யப்படுகிறது.

Related posts

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து