அவர்கள் அந்த மின்தடையை சரி செய்த பின்னர் மின்னகத்திலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டு மின்தடை சீரமைக்கப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்வார். இந்த சேவையானது 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்னகத்தில் ஒரே சமயத்தில் அதிகம் பேர் புகார் அளிக்க தொடர்பு கொள்ளும்போது பலருக்கு இணைப்பு கிடைப்பதில்லை. இதனால் புகார் அளிக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மின்கட்டணத்தை எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் செலுத்த ‘TNGEDCO’ என்ற செல்போன் செயலியை மின்வாரியம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில் கம்ப்ளைன்ட் என்ற பகுதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மின்தடை, மீட்டர் பழுது, மின் கட்டணம், மின்னழுத்த பிரச்னைகள் குறித்தும், சேதமடைந்த மின்கம்பம், மின் திருட்டு, தீ விபத்து, மின் கம்பி அறுந்து விழுந்து இருப்பது ஆகியவை தொடர்பாக புகார் அளிக்கும் சேவையை வாரியம் துவங்கி உள்ளது. அந்த செயலியில் மீட்டர் பழுது மற்றும் மின் கட்டண புகார்களுக்கு மின் இணைப்பு எண் பதிவிட வேண்டும். மற்ற சேவைகளுக்கான புகாரை மின் இணைப்பு எண் குறிப்பிடாமல் பதிவிடலாம்.
அவ்வாறு பதிவிடும் போது எந்த இடத்தில் இருந்து செயலியை இயக்குகிறோமோ, செல்போனில் உள்ள லொகேஷன் வசதி மூலம் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக முகவரிக்கு தானாகவே புகார் பதிவு செய்யப்படும். இந்த செயலியை தினந்தோறும் உயர் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால் செல்போன் செயலியில் பதிவிடப்படும் புகார்கள் மீது பொறியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.