இதனால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களிலும் வனத்துறையினர் சூழல் சுற்றுலா மையங்களை உருவாக்கி அதன் மூலம் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கின்றனர். அந்தந்த பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களைக் கொண்டு சூழல் சுற்றுலாத்தலங்களை நடத்தி வருகின்றனர். ஊட்டி அருகே உள்ள கேர்ன் ஹில் வனப்பகுதியிலும் இதே போன்று சூழல் சுற்றுலா மையம் மற்றும் வனத்துறை விரிவாக்க மையம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு விலங்குகளின் உருவங்கள் அடங்கிய பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், பல்வேறு பறவைகளின் சத்தங்களை கேட்கும் வகையில் இங்கு நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன் மட்டுமின்றி அதன் ஒலிகளையும் கேட்டு மகிழ்ந்து செல்கின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக புதிதாக இந்த சூழல் மையத்தில் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இந்த சைக்கிள் மூலம் கேர்ன் ஹில் சுற்றுலா மையத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும்.
தற்போது இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிள்கள் மூலம் கேர்ன் ஹில் வனப்பகுதியை சுற்றி பார்த்து மகிழ்கின்றனர்.