சென்னை: கள்ளக்குறிச்சி விஷசாராயம் தொடர்பான வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி விஷசாராயம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பாமக மனு தாக்கல் செய்தது. பாமக வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஐகோர்ட் நாளை ஒத்திவைத்தது. ஏற்கெனவே அதிமுக தொடர்ந்த வழக்கோடு சேர்த்து நாளை விசாரிக்கப்படும் என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.