இந்நிலையில், மேற்கொள்ளும் நிறுவனங்களை தேர்வு செய்ய டெண்டர் விடப்பட்டது. இருப்பினும், அந்த டெண்டர் பணிகளும் இதுவரை முடிவுக்கு வராமல் உள்ளது. இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கான பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகளுக்கான நேர்முகத்தேர்வு நேற்று நடைபெற்றது.
தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள எய்ம்ஸ் நிர்வாக அலுவலகத்தில், அதன் இயக்குநர் அனுமந்தராவ் தலைமையில் நேர்முகத் ேதர்வு நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த பலரும் நேரடியாக கலந்து கொண்டனர். ஒரு சில பணியிடங்களுக்கான நபர்கள், ஆன்லைன் மூலமாக பங்கேற்றனர். எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கட்டிட பணிகள் தொடர்பாக இதுவரை எந்த ஒரு இறுதி அறிவிப்பும் வெளியாகவில்லை.