இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மெய்பீஸ், குக்கி ஆகிய இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.இதையடுத்து வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பைரன் சிங் கூறுகையில்,‘‘ இன்டர்நெட் சேவை மே 3ம் தேதி முதல் முடக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரானதை அடுத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.