இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

அம்பத்தூர்: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், இணைய வழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையரகத்தின் இணைய வழி குற்றப்பிரிவு சார்பில், இணைய வழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் மற்றும் இணையவழி குற்றபிரிவு கூடுதல் துணை ஆணையர் நடேசன், அம்பத்தூர் உதவி ஆணையர் கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு