மும்பை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீடா அம்பானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாரீசில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 142வது கூட்டத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீடா அம்பானி இந்தியாவின் உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.