தமிழகம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் மாநிலம், செயற்கை நுண்ணறிவின் வருகையால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், நாம் அதற்கு ஏற்றாற்போல் நம் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், தமிழக அரசு மாணவர்களின் தொழில்நுட்ப திட்டங்களை வரவேற்கிறது. சிறந்த திட்டங்களாக இருந்தால் தேவையான வழிகாட்டுதலை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. இவை குறித்து மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஸ்டார்ட்அப் டி.என் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வுக்கூடம் தமிழகத்தில் அமைவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகும் என்றார். பின்னர், கவுரவ விருந்தினராக கலந்துகொண்ட ஸ்வர்ணபாரத் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் இமானி தீபா வெங்கட் பேசினார். இதனையடுத்து, தொழில்நுட்ப போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். நிறைவு விழாவில் சென்னை விஐடியின் இணை துணை வேந்தர் டி.தியாகராஜன், வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன், சென்னை விஐடியின் கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.