சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம்: சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து போயிங் நிறுவன ஸ்டார்லைனர் கேப்சூல் விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்புவோம் என சுனிதா வில்லியம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலனில் சில சிக்கல்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.கடந்த மாதம் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்து தங்களது ஆய்வை முடித்து பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது. ஆனால், அவர்கள் சுமார் 27 மணி நேரம் பயணித்து விண்வெளி நிலையத்தை அடைந்தார்கள். ஒரு வார காலத்துக்குப் பின் ஜூன் 14 அன்று அவர்கள் பூமி திரும்பி இருந்தனர்.

ஆனால், ஹீலியம் கசிவு, த்ரஸ்டர் செயலிழப்பு போன்ற காரணங்களால் அது ஒரு மாத காலத்தை தற்போது கடந்துள்ளது. இந்த விண்கலத்தில் பயணித்த முதல் இருவர் என்ற பெருமையை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாத இறுதியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் தகவல். இந்த விண்கலன் எங்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருமென மனதளவில் நான் முழுமையாக நம்புகிறேன். அதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. தோல்வி என்பது ஆப்ஷன் அல்ல. அதனால் தான் நாங்கள் இப்போது இங்கே தங்கி உள்ளோம். நாங்கள் பூமி திரும்புவதற்கான பணிகள் நடைபெறுகிறது” என சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இதனை புதன்கிழமை அவர் பகிர்ந்தார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் விண்வெளியில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருவது தொடர்பாக எதுவும் பேசவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

Related posts

தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த விவகாரம் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

அரவிந்த் கெஜ்ரிவால் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை ஒன்றிய பாஜ ஆட்சி நீடிப்பது சந்தேகம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

முதல்வர் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பதிவு முன்னாள் டிஜிபி நட்ராஜ் வருத்தம் தெரிவித்தார்: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து வாட்ஸ்அப் குழுவில் பதிவிட உயர்நீதிமன்றம் உத்தரவு