எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகாதினம்

திருவள்ளூர்: பூந்தமல்லி-ஆவடி சாலையில் உள்ள எஸ்.ஏ.பொறியியல் கல்லூரி சர்வதேச யோகா தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக இயந்திரவியல் துறை உதவிப்பேராசிரியர் தனசேகர் வரவேற்றார். சென்னை கொளத்தூர் ஹைவ் கவுன்சிலிங் சர்வீஸ் நிர்வாகி கௌதமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, யோகா உலகிற்குக் கொண்டு வந்துள்ள உடல் மற்றும் ஆன்மிகத் திறனைக் கொண்டாடவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. இது மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுப்பதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது வார்ம் அப் பயிற்சிகள் எடுக்கப்பட்டது.

Related posts

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை