தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டையை சேர்ந்த பிரதீப் வைஷ்ணவ் (24) என்பவர் மீது 90 மோசடி வாக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ரூ.1.5 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பிரதீப் வைஷ்ணவ் வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரை பிடித்தனர். அவரிடமிருந்து இரண்டு செல்போன்கள்.
10க்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர் மீது தெலங்கானா மாநிலம் வாரங்கல் காவல் நிலையத்தில் வழக்கு உள்ள காரணத்தால் அந்த போலீசாரிடம் தகவல் கொடுத்து ஒப்படைத்தனர். இவர் சர்வதேச அளவில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும் இவரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறிய நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.