சென்னை: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி (அதிமுக): ‘ஆணுக்கு இங்கு பெண் இளைத்தவரில்லை’ என்கிற வாக்கியத்தை நிரூபிக்கின்ற வகையில், எத்தனையோ பெரும் ஆளுமைகள் இன்னமும் இந்த சமூகத்திற்கு பெரும் ஊக்க சக்திகளாகவும், ஏனைய பெண்களுக்கு கிரியா ஊக்கிகளாகவும் இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதுபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி மற்றும் வி.கே.சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.ேக.வாசன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.