உட்கட்சி தகராறு: பாமக மாவட்ட செயலாளர் பிரகாஷ் உட்பட 4 பேர் மீது வழக்கு

சென்னை: பாமக உட்கட்சி தகராறில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் உட்பட 4 பேர் மீது சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 20-ம் தேதி நடந்த பாமக ஆலோசனை கூட்டத்துக்கு பின் பாமக பிரமுகர் முனுசாமியை தாக்கிய புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரகாஷ், டில்லி, சுதாகர், பிரசாத் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்