இடைநிலை ஆசிரியர் நியமனம் கூடுதலாக 1,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு

சென்னை: கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அதிகரித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2023-24ம் ஆண்டிற்காக 1768 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்புவதற்கு அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்படி பதவிக்கான 1000 கூடுதல் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

வக்பு வாரிய தலைவராக தேர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நவாஸ்கனி எம்பி வாழ்த்து பெற்றார்

போதைப்பொருள் பார்சல் வந்துள்ளதாக கூறி சென்னையில் 8 மாதத்தில் தொழிலதிபர்கள், பெண்களை மிரட்டி ரூ.132 கோடி பணம் பறிப்பு: பொதுமக்கள் உஷாராக இருக்க கமிஷனர் அருண் எச்சரிக்கை

ரேஸ் கிளப் குத்தகை ரத்தானதை எதிர்த்து கிளப் சார்பில் உரிமையியல் வழக்கு: அரசு பதில் தர உத்தரவு