கலப்புத் திருமணம்: பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: திருநெல்வேலியில் கலப்பு திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பெருமாள்புரத்தை சேர்ந்த உதயதாட்சாயினியும், பாளையங்கோட்டை சேர்ந்த மதன்குமாரும் அண்மையில் கலப்பு திருமணம் செய்தனர். கலப்பு திருமணத்திறகு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நானும் எனது கணவரும் எந்தவித அச்சுறுத்தல் இன்றி அமைதியாக வாழ காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஆவடி அருகே பயங்கரம் மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டி கொலை: 6 பேரிடம் போலீசார் விசாரணை

ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் தப்பி ஓட்டம்: பெரம்பலூரில் பரபரப்பு