டெல்லி: இடைக்கால பட்ஜெட் உரையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது. அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இடைக்கால பட்ஜெட் உதவும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.