டெல்லி: இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனு அளித்துள்ளார். மனு மீது ஜூன் 5ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது. ஜாமின் தற்போது நீட்டிக்கப்படாததால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைய வேண்டும்.