சென்னையில் 2வது நாளாக சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வம்

சென்னை: சென்னையில் நேற்று 2வது நாளாக நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில், ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான சிறப்பு முகாம் சென்னையில் முதல்கட்டமாக கடந்த 4 மற்றும் 5ம் தேதி நடந்தது.

அதை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில், 2 நாள் சிறப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2வது நாளாக நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம்களில் ஏராளமானேர் பங்கேற்று பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை மேற்கொண்டனர். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் அதற்கான படிவங்கள் வழங்கப்பட்டன.

Related posts

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!