இடைப்பாடி அருகே பரபரப்பு 4 வயது சிறுவனை கடத்தி செக்ஸ் டார்ச்சர்: கைதான தொழிலாளி மீது போக்சோ வழக்கு பாய்ந்தது

சேலம்: இடைப்பாடியில் கடத்தப்பட்ட சிறுவன் செக்ஸ் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அவனுக்கு ஆபரேசன் நடந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான். திடீரென அச்சிறுவனை காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங் களிலும் தேடியும் எந்த தகவலும் இல்லை. உடனே தேவூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தனர். போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். விடிய விடிய தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை வெள்ளாளப்பாளையம் காவிரி கரையோரம் புதருக்குள் இருந்த சிறுவனை படகோட்டி ஒருவர் பார்த்தார்.

உடனடியாக அங்கிருந்த ேபாலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அரை மயக்க நிலையில் இருந்த சிறுவனை மீட்ட போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி கிசிச்சை அளித்தனர். தொடர் விசாரணையில், சிறுவனை கடத்தி சென்றது வெள்ளாளபாளையத்தை சேர்ந்த லட்சுமணன் (43) என்பது தெரியவந்தது. அவரை கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அச்சிறுவனை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறுவனின் ஆசனவாய் பகுதியில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.

டாக்டர்களின் தீவிர சோதனையில் அங்கு சிறிய குச்சி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குச்சியை அகற்றினர். சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட லட்சுமணனிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் சிறுவனிடம் செக்ஸ் டார்ச்சர் செய்ததை ஒப்பு கொண்டான். இதையடுத்து கடத்தல் மற்றும் போக்சோ வழக்கில் அவரை கைது செய்தனர். இரவோடு இரவாக அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கூடுதல் விலைக்கு மது விற்பனையை தடுக்க 12,000 பில்லிங் மெஷின்கள்: அமைச்சர் முத்துசாமி தகவல்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு டாக்டர் போக்சோவில் கைது: பள்ளி தலைமை ஆசிரியையான தாயும் சிக்கினார்

மருத்துவ கல்லூரிகளில் டீன்களை உடனடியாக நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு