இதுகுறித்து டெல்லி போலீசார் கூறுகையில், ‘தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண், டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்தார். அவரது தந்தை உளவு பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்ததால், அவரது தாயாருக்கு கருணை அடிப்படையில் உளவு பிரிவில் பணி வழங்கப்பட்டது. தாயும், மகளும் அரசு விடுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் பட்டப்படிப்பு படித்து வந்த உளவுத்துறை அதிகாரியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த வீட்டில் தற்கொலைக் குறிப்பு கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் யார் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்படவில்லை. தனது தாயிடம் மன்னிப்பு கேட்டு எழுதியுள்ளார். தான் மகிழ்ச்சியற்ற நிலையில் இருப்பதாகவும், அதனால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.