அங்கே இப்போது இடங்கள் கொடுத்தாலும்கூட, அங்கே புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டுமென்று சொன்னால், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் என்று சொல்லி,ரூ.13 கோடியிலே இப்போது புதிதாக கட்டிடங்களும், அங்கே இருக்கக்கூடிய நீதித் துறை நடுவர்களுடைய குடியிருப்புகளும் கட்டப்படுகிறது. எனவே, நிதிநிலைமைக்கேற்றவாறு, ஒன்றிய அரசாங்கத்தினுடைய நிதியின் அடிப்படையிலே தான் ஆண்டுதோறும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
அந்தவகையில் முன்னுரிமையிலே இருக்கக்கூடிய கட்டிடங்களுக்கு முதல் வரிசையில் இடம் கொடுத்து அதைத் தொடர்ந்து எங்கெங்கெல்லாம் தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் கட்டிக் கொடுக்கப்படும். எனவே, உறுப்பினர், இப்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்ற நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் கேட்டு ஏற்கெனவே கொடுத்திருக்கிறார். அது இன்றைக்கு உயர்நீதிமன்றத்தின் மூலமாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதன்பிறகு நிதித் துறையினுடைய ஒப்புதல் பெற்று, அதன்பிறகு முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, உரிய அறிவிப்பு தேவைப்படின் தரப்படும்” என்றார்.