கர்நாடக: நிறத்தை குறிப்பிட்டு ஒருவரை அவமதிப்பது கொடுமையானது என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய நபருக்கு, விவாகரத்து வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கருப்பு நிறமுடையவர் என்ற காரணத்திற்காக மனைவி அவமானப்படுத்தியதாக கணவர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. கணவரை கருப்பன் என அழைப்பது கொடுமையானது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.