திருவள்ளூர்: அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திட்டமில்லா பகுதிகளில் 1.11.2011க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு, வரன்முறை படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 1.8.2024 முதல் 31.1.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஆணை பிறப்பித்துள்ளது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள் அரசு கடிதம் குறிப்பிட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.