இன்ஸ்டாகிராம் காதலால் கர்ப்பிணியான சிறுமி: வாலிபருக்கு வலை

நெல்லை: நெல்லையில் இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர். நெல்லையில் 16 வயது சிறுமி ஒருவரை வாலிபர், ஓராண்டுக்கு மேலாக இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து, ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார்.

மேலும் திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறுப்படுகிறது. சிறுமி கர்ப்பிணியான நிலையில், மருத்துவமனையில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் நெல்லை தாலுகா அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வாலிபரை தேடி வருகின்றனர்.

Related posts

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி பகுதியில் சாலைத்தடுப்பில் வாடகை கார் மோதி விபத்து

பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும்: நடிகர் சங்கத் தலைவர் நாசர்

மகாவிஷ்ணு கைது விவகாரத்தில் சட்டம் கடமையை செய்துள்ளது: செல்வபெருந்தகை பேட்டி