இந்நிலையில், ரவுடிகள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சஞ்சயை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அதில் மரத்தால் செய்யப்பட்ட இரண்டு கத்தி, பிளாஸ்டிக் துப்பாக்கியை வைத்து கெத்துக்காக, ரீல்ஸ் வெளியிட்டது தெரிந்தது. இவர் மீது ஏற்கனவே வழக்கு உள்ளதால் அவரை வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து, தொடர்ந்து சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்ட சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் தந்தை ராதாகிருஷ்ணன் (எ) கிஷ்டா என்பவரை கடந்த 2010ம் ஆண்டு பிரபல ரவுடி வெள்ளை பிரகாஷ் மற்றும் அவரது ஆட்கள் வெட்டி கொலை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.