மதுரை: காவல் நிலையத்தில் புகார் தர வந்தவரிடம் 32 சவரன் நகை வாங்கிக் கொண்டு மோசடி செய்த பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விவாகரத்து புகாரில் திருமங்கலம் காவல் ஆய்வாளர் கீதா, பறிமுதல் செய்த 32 சவரன் நகைகளை ஒப்படைக்காததால் கைது செய்யப்பட்டுள்ளார்.