சென்னை: புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். புலவர் செ.ராசு (85) வயது மூப்பின் காரணமாக மறைந்தார் என அறிந்து வருத்தமுற்றேன். கல்வெட்டு, செப்பேடு, சுவடிகளை பதிப்பித்து தமிழுக்கு தொண்டாற்றிய செ.ராசு மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்கு பேரிழப்பு என்று முதல்வர் கூறியுள்ளார்.