சென்னை: புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% உயர்ந்துள்ளது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. உயர்கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுமைப் பெண், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.