இந்த தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நஃபே சிங் ரதீ கொலை குறித்து அரியானா காவல்துறை விசாரணை செய்து வரும் நிலையில் இந்த விவகாரம் மாநில சட்டமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. நஃபே சிங் ரதீ அரசியல் காரணங்களுக்காவே படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டிய எதிர்கட்சிகள் உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வலியுறுத்தினர்.
இந்நிலையில், படுகொலையின் போது உடனிருந்த நஃபே சிங்கின் மருமகன் ராகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. நரேஷ் கெளசிக் உள்ளிட்ட 12 பேர் மீது கொலை, குற்றச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நஃபே சிங் ரதீகொலை வழக்கு விரைவில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என அரியானா உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.