இதில், அட்டைப்பெட்டி தயாரிக்கும் மூலப்பொருளான கிராப்டு காகிதம் கடந்த ஒரு மாதத்தில் ரூ.3 ஆயிரம் விலை ஏற்றப்பட்டுள்ளது. இது அட்டைப்பெட்டி உற்பத்தி தொழிலுக்கு பேராபத்தை தந்துள்ளது. அதுபோல், மின்சார கட்டணமும் உயர்ந்துள்ளது. எனவே, அட்டைப்பெட்டிக்கு இன்று (நேற்று) முதல் 15 சதவிகிதம் விலை உயர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இந்த விலை உயர்வுக்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.