உரிமை மீறல் நோட்டீஸ்: தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து சபாநாயகர்தான் முடிவெடுக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பு வாதங்களை தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்