சென்னை: திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து சபாநாயகர்தான் முடிவெடுக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பு வாதங்களை தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.