உள்கட்டமைப்புக்கான நிதி ஆதரவுக்காக, மாநிலங்களுக்கு ஊக்கமளிக்க இந்த ஆண்டு ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா நீண்ட கால கடன் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுதவிர, உள்கட்டமைப்பு முதலீட்டில் தனியாரையும் பங்கேற்க செய்யும் வகையில், இடைவெளி நிதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.