இதில் 1,869 புற்றுநோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் 26 சதவீதம் பேருக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ஆய்வை தலைமை ஏற்று நடத்திய மூத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஆஷிஷ் குப்தா கூறியதாவது: இந்தியாவில் அதிக புகையிலை பழக்கம் மற்றும் பாலியல் ரீதியான மனித பாப்லோமா வைரஸ் (எச்பிவி) தொற்று காரணமாக தலை மற்றும் கழுத்து புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குறிப்பாக இளைஞர்களிடம் இது அதிகரித்து வருகிறது.
மற்ற புற்றுநோய் போல் அல்லாமல் வாழ்க்கை முறை மாற்றத்தாலேயே பெரும்பாலான தலை மற்றும் கழுத்து புற்றுநோயை தடுக்க முடியும். முதல் 2 நிலைகளில் நோய் கண்டறியப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணப்படுத்தப்படுகின்றனர். முறையான பரிசோதனை இல்லாததால்தான் இந்தியாவில் மூன்றில் 2 பங்கு பேருக்கு புற்றுநோய் தாமதமாக கண்டறியப்படுகிறது. எனவே புகையிலை பழக்கத்தை கைவிடவும், நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஆரம்ப பரிசோதனைகள் அவசியம் என்கிற விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.