இந்நிலையில், மாதத்தில் 2வது முறையாக நேற்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில், நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.5 உயர்ந்தது. தற்போது, ஒரு கிலோவுக்கு 10ம் நம்பர் கோம்டு நூல் விலை ரூ.187க்கும், 16ம் நம்பர் ரூ.197க்கும், 20ம் நம்பர் ரூ.255க்கும், 24ம் நம்பர் ரூ.267க்கும், 30ம் நம்பர் ரூ.277க்கும், 34ம் நம்பர் ரூ.290க்கும், 40ம் நம்பர் ரூ.310க்கும், 20வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.247க்கும், 24ம் நம்பர் ரூ.257க்கும், 30வது நம்பர் ரூ.267க்கும், 34ம் நம்பர் ரூ.280க்கும், 40ம் நம்பர் ரூ.300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நூல் விலை உயர்வு திருப்பூர் தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.