புதுடெல்லி: தூய்மையான நகரங்கள் கணக்கெடுப்பு திட்டத்தின்கீழ் கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்தியாவிலுள்ள தூய்மையான நகரங்கள் கணக்கெடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டு வருகின்றன. இந்த பட்டியலை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று வௌியிட்டார். இந்த பட்டியலில் மத்தியபிரதேசத்தின் இந்தூர், குஜராத்தின் சூரத் ஆகிய நகரங்கள் முதலிடம் பிடித்துள்ளன.
இந்தூர் தொடர்ந்து 7வது முறையாக முதலிடம் பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் நவி மும்பை 3வது இடம், ஆந்திராவின் விசாகப்பட்டினம் 4ம் இடம், டெல்லி மாநகராட்சி 7வது இடம், தெலங்கானாவின் ஐதராபாத் 9வது இடம் பிடித்துள்ளன. சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பிரிவில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்கள் 2வது இடத்தையும் பெற்றுள்ளன.