அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால்,அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து பதவிக்காலம் தொடங்குகிறதா, முதல் கூட்டம் நடந்த நாளில் இருந்து தொடங்குகிறதா என்பது குறித்து பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை நியமித்த உத்தரவை பொறுத்தவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.