Sunday, September 8, 2024
Home » ஊழியர்களுக்கு 3 மாதம் சம்பளம் பாக்கி மூடப்படும் நிலையில் இந்திரா கேன்டீன்கள்: ஒப்பந்ததாரர்கள் மீது புகார்

ஊழியர்களுக்கு 3 மாதம் சம்பளம் பாக்கி மூடப்படும் நிலையில் இந்திரா கேன்டீன்கள்: ஒப்பந்ததாரர்கள் மீது புகார்

by Dhanush Kumar

 

ஷிவமொக்கா: ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள இந்திரா கேன்டீன் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி உள்ளதால், தற்போது மூடப்படும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஏழைகள், கூலி தொழிலாளர்களின் பசியை போக்கும் இந்திரா கேன்டீன்கள் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் 7 இந்திரா கேன்டீன்கள் உள்ளன. அதில் ஷிவமொக்கா நகரில் 4, சாகரில் 1, பத்ராவதியில் 2 கேன்டீன்கள் செயல்படுகின்றன. ஆனால், கடந்த ஓராண்டாக மாநகரில் உள்ள 4 கேன்டீன் நிர்வாகப் பொறுப்பில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு அரசு பணம் வழங்கவில்லை. இதனால், ஒப்பந்ததாரர்கள், சொந்த பணத்தை செலவழித்து, கேன்டீனை நிர்வகித்து வருகின்றனர்.

ஷிவமொக்கா நகரில் 4 கேன்டீன்களுக்கு ரூ.40 லட்சம், சாகரில் 1 கேன்டீனுக்கு ரூ.10 லட்சம், பத்ராவதியில் 2 கேன்டீன்களுக்கு ரூ.30 லட்சம் அரசு செலுத்த வேண்டும். இங்கு ஒப்பந்த காலம் முடிவடைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால், அதற்கான நிதி அரசால் விடுவிக்கப்படவில்லை. இதனால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நகரம் முழுவதும் உள்ள சமையலறை உற்பத்தி பிரிவில் 8 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இங்கு சம்பளத்தை நம்பி பலர் வேலை செய்கின்றனர். இதில் ஒப்பந்ததாரர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஊழியர்களின் கேள்விகளுக்கு ஒப்பந்ததாரர்கள் பதிலளிப்பதில்லை. மாதம் முழுவதும் சம்பளம் கேட்டால், பாதி பணம் வங்கி கணக்கில் போடப்படும் என்று சொல்வார்கள். இதனால் குடும்பம் நடத்த முடியாத நிலை உள்ளது. ஒப்பந்ததாரர்களை நேரடியாக சந்திக்க, மாவட்டத்துக்கு வருவது முடியாத காரியம். ஊழியர்கள், மக்களுக்கு உணவளிக்கிறார்கள். ஆனால், அவர்கள் வயிற்றை யார் நிரப்புவார்கள் என்றனர். இதுதொடர்பாக இந்திரா கேன்டீன் ஊழியர்கள் கூறும்போது, ஒப்பந்ததாரர் ஊழியர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் கேட்டால் பதில் இல்லை. இதை நாம் கேட்கலாம். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் கேட்பதில்லை. மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பலனில்லை என்றனர்.

* பழைய மெனு

கடந்த 2018ம் ஆண்டு தயார் செய்த உணவு மெனு தற்போது வரை அமலில் உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மெனு மாற்றப்பட்டது. அதில், ராகி, முட்டே, இட்லி, மங்களூரு பன்ஸ், பிஸ்பேல் பாத், புலாவ், கராபத், பொங்கல், ரொட்டி ஜாம், சௌசௌபாத் ஆகியவை வழங்க வேண்டும். மதிய உணவு மற்றும் இரவு உணவில் ராகிமுத்தே, சப்பாத்தி, சாதம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் மாவட்டத்தில் உள்ள இந்திரா கேன்டீன்களில் அது கிடைப்பதில்லை. உணவின் தரமும் மோசமாக உள்ளது. உணவின் தரத்தை பராமரிக்க வேண்டும். அதை சரிவர செய்வதில்லை என ஒப்பந்ததாரர்கள் அரசு மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.

You may also like

Leave a Comment

10 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi