Tuesday, October 8, 2024
Home » இந்தியா யு-19 அபார ரன் குவிப்பு

இந்தியா யு-19 அபார ரன் குவிப்பு

by Francis

சென்னை: ஆஸ்திரேலியா யு-19 அணியுடனான 2வது இளைஞர் டெஸ்ட் போட்டியில், இந்தியா யு-19 அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 316 ரன் குவித்தது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா யு-19 அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. விஹான் மல்கோத்ரா, வைபவ் சூர்யவன்ஷி இணைந்து இன்னிங்சை தொடங்கினர். சூர்யவன்ஷி 3 ரன்னில் வெளியேற, படு நிதானமாக விளையாடிய விஹான் 75 பந்தில் 1 பவுண்டரி உள்பட 10 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். தொடக்க வீரர்கள் ஏமாற்றமளித்த நிலையில்… சக முன் வரிசை வீரர்கள் நித்ய பாண்டியா 94 ரன் (135 பந்து, 12 பவுண்டரி), கே.பி.கார்த்திகேயா 71 ரன் (99 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), நிகில் குமார் 61 ரன் (93 பந்து, 7 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர்.

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா யு-19 அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 316 ரன் குவித்துள்ளது. கேப்டன் சோஹம் பட்வர்தன் 61 ரன் (120 பந்து, 6 பவுண்டரி), ஹர்வன்ஷ் பங்காளியா 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆஸி. யு-19 தரப்பில் ஹாரி ஹோக்ஸ்ட்ரா 2, பேட்டர்சன், கிறிஸ்டியன் ஹோவ், விஸ்வா ராம்குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள்
ஆட்டம் நடக்கிறது.

 

You may also like

Leave a Comment

4 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi