ஆனால் மாநாட்டை நடத்துவது பற்றி நமது உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமர் செய்ததை போல் பிரேசில் தம்பட்டம் எதுவும் அடித்து கொள்ளவில்லை. நவம்பர் 2024 உச்சிமாநாட்டில், 1000 கோடிக்கு மேல் சொத்துகள் உடைய கோடீஸ்வரர்கள் மீது 2 சதவீத சொத்து வரிக்கான திட்டத்தை பிரேசில் முன்வைத்துள்ளது. இந்த முன்மொழிவை பிரான்ஸ், ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜெர்மனி ஏற்கனவே ஆதரித்துள்ளன. இந்தியா இது குறித்து மவுனமாக உள்ளது. இது பற்றி விவாதிக்கப்படும் போது இந்தியாவின் நிலை என்னவாக இருக்கும்.ஒரு அறிக்கையின்படி இந்தியாவில் 334 பேர் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த திட்டம் பற்றி விவாதிக்கப்படும் போது இந்தியாவின் நிலை என்ன என்பது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.