சென்னை: இந்திய அளவில் ஜி.எஸ்.டி. வருவாய் சேகரிப்பில் சென்னை மண்டலம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜி.எஸ்.டி. முதன்மை தலைமை ஆணையர் மண்டலிகா சீனிவாஸ் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருவாய் முந்தைய ஆண்டைவிட 19% அதிகரித்து உள்ளது. பெரிய மாநிலங்களில் கர்நாடகா, மராட்டியத்தை அடுத்து தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளதாக மண்டலிகா சீனிவாஸ் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்தில் 3 தணிக்கை ஆணையங்கள் செயல்படுகின்றன.