Saturday, September 21, 2024
Home » இந்தியா அபார ரன் குவிப்பு

இந்தியா அபார ரன் குவிப்பு

by Francis

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூலை 22: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடி ரன் குவித்தது. குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 57, கேப்டன் ரோகித் 80, கில் 10, ரகானே 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். கோஹ்லி 87 ரன், ஜடேஜா 36 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய கோஹ்லி சதம் விளாசினார். மறு முனையில் ஜடேஜா அரை சதம் அடித்தார்.

கோஹ்லி – ஜடேஜா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 159 ரன் சேர்த்தது. கோஹ்லி 121 ரன் (206 பந்து, 11 பவுண்டரி) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ஜடேஜா 61 ரன் (152 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ரோச் வேகத்தில் டா சில்வாவிடம் பிடிபட்டார். இந்தியா 108 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 373 ரன் குவித்திருந்தது. இஷான் 18, அஷ்வின் 6 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

You may also like

Leave a Comment

nineteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi