புதுச்சேரி: இந்திய குடியரசு தினம் குடிமக்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய நன்நாள் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார். ஜனநாயக கடமைகளை உணர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட உறுதியேற்போம். கதர், கைத்தறி ஆடைகளை உடுத்தி பாரம்பரிய பெருமைகளை நிலை நிறுத்தி கொண்டாடுவோம் என தமிழிசை கூறியுள்ளார்.