Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Friday, September 12 2025 Epaper LogoEpaper Facebook
Friday, September 12, 2025
search-icon-img
Advertisement

இந்திய கடற்படை பதிலடி கொடுக்காதது ஏன்?.. தமிழ்நாடு மீனவர்கள் அனாதையா?.. மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்

டெல்லி: தமிழ்நாடு மீனவர்கள் அனாதையா? என மாநிலங்களவையில் வைகோ ஆவேசமாக பேசினார். தமிழ்நாடு மீனவர்கள் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.; இலங்கையால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்; இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்திய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து வரி கட்டுகிறோம்; மீனவர்களை காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

மீனவர்கள் கைதை கண்டித்து நூற்றுக்கணக்கான மீனவ மகளிர் ராமேஸ்வரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும்போது இலங்கை கடற்படை மீது ஒரு குண்டாவது சுட்டிருக்குமா இந்திய அரசு? தமிழ்நாடு மீனவர்கள் அனாதையா? இலங்கை கடற்படையுடன் இந்திய கடற்படையும் கைகோர்த்து மீனவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

மீனவர்களை பாதுகாக்க இந்திய கடற்படை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர் பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய அரசு ஏமாற்றி வருவதாக மாநிலங்களவையில் வைகோ குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; தமிழக மீனவர்களின் காக்க ஒன்றிய அரசு வாழ்வாதாரத்தை நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்களின் பிரச்னைக்கு அனைத்து வழிகளிலும் தீர்வு காண முயற்சித்து வருவதாக உறுதி அளித்தார்.