இங்கிலாந்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்த இந்திய டாக்டருக்கு சிறை

லண்டன்: மசாஜ் செய்வதாக கூறி இங்கிலாந்து பெண் நோயாளியை பலாத்காரம் செய்த இந்திய வம்சாவளி டாக்டருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின், ஈஸ்ட்போர்ன் மாவட்ட மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் சைமன் ஆபிரகாம்(34). கடந்த 2020ம் ஆண்டு மருத்துவமனைக்கு வந்த ஒரு பெண் நோயாளி தனக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுவதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கும்படி சைமனிடம் கேட்டுள்ளார். அப்போது சைமன், தலைவலி பிரச்னைக்கு சிறப்பு மசாஜ் சிகிச்சை இருப்பதாகவும் அதற்காக இந்தியாவில் 2 வருட பயிற்சி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதை நம்பிய அந்த பெண் அவரை வீட்டுக்கு அழைத்து சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சையின் போது சைமன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இது பற்றி விசாரணை நடத்திய சசெக்ஸ் போலீசார் சைமனை கைது செய்தனர். சிக்கெஸ்டர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. சைமனுக்கு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில், 9 மாதங்கள் சிறையிலும், மீதி உள்ள 9 மாதங்கள் அவர் பரோலிலும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு