இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எரிசக்தி துறை, திரிகோணமலை எண்ணெய் கிட்டங்கி திட்டம், துறைமுகங்கள், ரயில்வே ஆகிய துறைகளில் இந்தியா முதலீடு செய்வது குறித்து சந்தோஷ் ஜாவுடன் குணவர்த்தனா பேசினார். பொருளாதார நெருக்கடி காலத்தில் கடனுதவி, நிவாரண பொருட்கள், மருந்து மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கி உதவி செய்ததற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவிப்பதாக குணவர்த்தனே கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.