இந்திய வம்சாவளி வாலிபர் சடலம் மீட்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜெர்மன் நகரை சேர்ந்தவர் அன்கிட் பாகாய். மென்பொருள் பொறியாளரான இவர் 9ம் தேதி திடீரென காணாமல் சென்றார். அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். மேலும் உள்ளூர் போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மேரிலேண்டில் உள்ள ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டனர். விசாரணையில் ஏரியில் இருந்து மீட்கப்பட்டது காணாமல் போன அன்கிட் சடலம் என கண்டறியப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது