இதனிடையே இப்போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து விடைபெற்றார். போட்டி முடிந்து கண்ணீருடன் வெளியேறிய அவருக்கு சக வீரர்கள், மைதானத்தில் குடி இருந்த ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்தனர். சுனில் சேத்ரி இதுவரை 151 சர்வதேச போட்டிகளில் விளையாடி 94 கோல்கள் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையுடன் நாட்டின் கால்பந்து விளையாட்டை அடுத்தகட்டத்துக்கு அழைத்து சென்றவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.