டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் புதிதாக தேர்வாகியுள்ள இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் ஒன்றாக மக்களவைக்குள் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாத்மா காந்தி சிலை முன்பு நிறுவப்பட்டிருந்த இடத்தில் எம்பிக்கள் அனைவரும் ஒன்றாக கூடிய பிறகு, கைகளில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி மக்களவைக்குள் நுழைவார்கள் என கூறப்படுகிறது.