சென்னை: இந்தியாவே வியக்க வெற்றிகரமாக உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திட்டங்கள், முதலீடு ஈர்ப்பில் மிகப்பெரிய பாய்ச்சல்தான் உலக முதலீட்டாளர் மாநாடு எனவும் திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு இளைஞர்களும், மகளிரும் உயரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.